Tuesday 22 December 2009

ஈழத்திற்கு தந்த வரங்கள்

தீபாவளியை போல
போர்முனையில் வெடிக்கும்
ஆயிரம் சரங்கள்
வீடு திரும்பும் நாள் வருமா
என்று வீரர்களின் ஏக்கங்கள்
நாட்டில் அவர் செய்ய
காத்திருக்கும் பல ஆக்கங்கள்
எப்போது வெடிக்குமோ என்று
விழித்திருந்து விட்ட தூக்கங்கள்
அதனால் அவர் உடலில்
ஏற்பட்ட பல தாக்கங்கள்
நிரைவேறாமல் போன பல
நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்
அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்
உள்ளக் கூக்குரல் கே ட்காமல்
சண்டையிடும் செவுடுகள்
கத்திப் பேசினாலும் யாரும்
கேட்காமல் காய்ந்த உதடுகள்
இதெல்லாம்
கடவுள் இந்த ஈழத்திற்கு தந்த வரங்கள்...!


No comments:

Post a Comment